அத்தியாவசிய பொருட்களை வாங்க நேரம் குறைப்பு - விதிகளை மீறினால் கடும் நடவடிக்கை - முதலமைச்சர்
ஊரடங்கு நேரத்தில் மக்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்தும் வகையில் அத்தியாவசிய பொருட்கள் வாங்கும் நேரத்தை குறைத்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
ஊரடங்கு நேரத்தில் மக்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்தும் வகையில் அத்தியாவசிய பொருட்கள் வாங்கும் நேரத்தை குறைத்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். மக்கள் நடமாட்டத்தை குறைக்கும் பொருட்டு அத்தியாவசிய பொருட்கள் வாங்க காலை 6 மணி முதல் பிற்பகல் 2.30 மணி வரை அனுமதிக்கப்பட்ட நேரத்தை குறைத்து காலை 6 மணி முதல் மதியம் ஒரு மணி வரை மட்டுமே பொருட்களை வாங்க முடியும் என முதலமைச்சர் தெரிவித்துள்ளார். இந்த விதிமுறைகளை மீறுவோர் மீது சட்டரீதியாக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் முதலமைச்சர் பழனிசாமி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
Next Story