144 தடை உத்தரவு இல்லாத மார்க்கெட் பகுதிகள் ?

சென்னை திருவொற்றியூர் மார்க்கெட் பகுதியில் குவிந்துள்ள மக்களால் 144 தடை உத்தரவு உள்ளதா என்ற கேள்வி எழுந்துள்ளது
144 தடை உத்தரவு இல்லாத மார்க்கெட் பகுதிகள் ?
x
திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் கிராஸ் ரோடு மார்க்கெட் மற்றும் காலடிப்பேட்டை மார்க்கெட் பிரதான மார்க்கெட் களாக செயல்பட்டு வருகிறது இந்நிலையில் மக்களின் கூட்டம் அதிகமாக காணப்படுவதால் கிராஸ் ரோடு மார்க்கெட் புதுவண்ணாரப்பேட்டை சுங்கச்சாவடி பேருந்து நிலையத்திற்கு மாற்றப்பட்டது

 காலடிபேட்டை மார்க்கெட் பகுதியில் செயல்பட்டு வரும் கடைகளுக்கு பொருட்களை வாங்குவதற்காக வரும் பொதுமக்கள் சமூக விலகல் என்பது ஒன்று இருப்பதை மறந்து விட்டு சகஜ நிலையில் இயல்பாக எப்போதும் போல் மார்க்கெட்டில் வலம் வருகின்றனர்


1 மீட்டர் இடைவெளி விட்டு நிற்க வேண்டும் என மாநகராட்சி அதிகாரிகளும் காவல் துறையும் பல்வேறு விழிப்புணர்வு ஏற்படுத்தி வந்தாலும் பொதுமக்கள் சற்றும் அதற்கு செவி கொடுக்காதது வேதனை அளிப்பதாக சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்


Next Story

மேலும் செய்திகள்