வரும் 15ம் தேதி முதல் மீண்டும் ரயில் சேவை : தென்மாவட்ட ரயில்களில் முன்பதிவு விறுவிறுப்பு

நாடு முழுவதும் வரும் 15ம் தேதி முதல் ரயில் சேவை துவங்க வாய்ப்புள்ளதால், தென் மாவட்டங்களுக்கு செல்லும் ரயில்களில் முன்பதிவு விறுவிறுப்பாகி உள்ளது.
வரும் 15ம் தேதி முதல் மீண்டும் ரயில் சேவை : தென்மாவட்ட ரயில்களில் முன்பதிவு விறுவிறுப்பு
x
கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் விதமாக, ரயில் சேவை வரும் 14ஆம் தேதி வரை நிறுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில் வரும் 15ஆம் தேதி முதல் மீண்டும் சேவை துவங்குகிறது. இதற்கான முன்பதிவு நேற்று துவங்கிய நிலையில், வெளியூர்களுக்கு செல்ல ஏராளமானோர் ஆர்வமுடன் முன்பதிவில் ஈடுபட்டனர். குறிப்பாக வரும் 15ம் தேதி அன்று, தென் மாவட்டங்கள் செல்லும் பல ரயில்களில் முன்பதிவு காத்திருப்போர் பட்டியலுக்கு சென்றுள்ளது். நெல்லை, பொதிகை, கன்னியாகுமரி, பாண்டியன் ஆகிய விரைவு ரயில்களில் இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி முன்பதிவு நிறைவடைந்துள்ளது. மேலும், முத்துநகர், குருவாயூர் உள்ளிட்ட விரைவு ரயில்களில் மட்டும் 10 முதல் 25 டிக்கெட்கள் காலியாக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Next Story

மேலும் செய்திகள்