டெல்லி மாநாட்டிற்கு சென்றவர்களை தங்கவைக்க எதிர்ப்பு: சமுதாய நலக்கூடம் முன்பு பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்
சென்னை தண்டையார்பேட்டையில் உள்ள மாநகராட்சி சமுதாய நலக்கூடத்தில், டெல்லி மாநாட்டிற்கு சென்று திரும்பியவர்களை தங்கவைக்க எதிர்ப்பு தெரிவித்து, அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை தண்டையார்பேட்டையில் உள்ள மாநகராட்சி சமுதாய நலக்கூடத்தில், டெல்லி மாநாட்டிற்கு சென்று திரும்பியவர்களை தங்கவைக்க எதிர்ப்பு தெரிவித்து, அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. முன்னதாக திருவொற்றியூர், எண்ணூர் பகுதியில் கண்டறியப்பட்டவர்களுக்கு ஸ்டான்லி மருத்துவமனையில் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இடநெருக்கடி காரணமாக, 100-க்கும் மேற்பட்டோர் சமுதாய நலக்கூடத்திற்கு அழைத்துசெல்லப்பட்டதை அறிந்து மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து வந்த ராயபுரம் உதவி ஆணையர் போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.
Next Story