கொடைக்கானலில் பயங்கர காட்டுத்தீ: தீயை கட்டுப்படுத்த முடியாமல் வன, தீயணைப்பு துறை திணறல்
கடும் வெயிலால் கொடைக்கானல், நகரின் பல்வேறு பகுதிகளில் உள்ள பட்டா நிலங்களில் தீ விபத்து ஏற்பட்டு வருகிறது.
கடும் வெயிலால் கொடைக்கானல், நகரின் பல்வேறு பகுதிகளில் உள்ள பட்டா நிலங்களில் தீ விபத்து ஏற்பட்டு வருகிறது. இதனிடையே, பெருமாள்மலை அருகே, பட்டா நிலத்தில் ஏற்பட்ட தீ, மளமளவென பரவி தலமலை, மச்சூர், உள்ளிட்ட சுமார் 500 ஏக்கர் வனப்பகுதிகள் கொழுந்துவிட்டு எரிந்து வருகிறது. வன மற்றும் தீயணைப்பு துறையினர், தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இருப்பினும், தீ தொடர்ந்து பரவி வருவதால், கட்டுப்படுத்த முடியாமல் திணறிவருகின்றனர்.
Next Story

