"கொரோனா க​ண்ணுக்கு தெரியாத எதிரி" - சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எச்சரிக்கை

வெளியே நடமாடுவதால் நமக்கு தெரியாமல் கொரோனா வைரஸின் பலத்தை அதிகரிக்கிறோம் என சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சாஹி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கொரோனா க​ண்ணுக்கு தெரியாத எதிரி - சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எச்சரிக்கை
x
பயணம் தொடங்கியது என்ற தலைப்பில் அவர் எழுதியுள்ள கடிதத்தில், கொரோனா வைரஸ் திருட்டுத்தனமாக நம்மை சூழ்ந்து கொண்டதாகவும், அதனை குறைத்து மதிப்பிட்டதால் பல வளர்ந்த நாடுகள்கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக  தெரிவித்துள்ளார். 

நடமாட்டமும், தொடர்பும் தான் இந்த வைரஸ் பரவக் காரணம் எனக் குறிப்பிட்டுள்ள அவர், கண்ணுக்குத் தெரியாத எதிரி என்பதால் நாம் மறைவாக இருப்பது தான் விவேகமானது என்ற  சாணக்கியரின் கூற்றை சுட்டிக்காட்டியுள்ளார். 

தனித்திருந்து பேரழிவை தடுக்க வேண்டும் எனவும், தனித்திருப்பதை பாதுகாப்புக்கான பயிற்சி வாய்ப்பாக கருத வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார். 


Next Story

மேலும் செய்திகள்