ஒருநாள் சம்பளத்தை வழங்க சத்துணவு ஊழியர்கள் முடிவு

தமிழகத்தில் உள்ள 1 லட்சத்திற்கும் அதிகமான சத்துணவு ஊழியர்கள் தங்களது ஒருநாள் ஊதியத்தை கொரோனா பாதிப்பு நிவாரண நிதியாக வழங்க முடிவு செய்துள்ளனர்.
ஒருநாள் சம்பளத்தை வழங்க சத்துணவு ஊழியர்கள் முடிவு
x
தமிழகத்தில் உள்ள 1 லட்சத்திற்கும் அதிகமான சத்துணவு ஊழியர்கள் தங்களது ஒருநாள் ஊதியத்தை கொரோனா பாதிப்பு நிவாரண நிதியாக வழங்க முடிவு செய்துள்ளனர். இது தொடர்பாக மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் செய்தியாளர்களிடம் பேசிய அந்த சங்கத்தினர் உணவின்றி தவிக்கும் ஏழைகளுக்காகவும், காவல்துறை மருத்துவத்துறை அதிகாரிகளுக்கும் தமிழகம் முழுவதும் உள்ள சத்துணவு ஊழியர்கள் உணவு தயாரித்து வழங்கி வருவதாக தெரிவித்தனர்.

Next Story

மேலும் செய்திகள்