கன்னியாகுமரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டிருந்தவர் பரிசோதனை முடிவு வெளிவராத நிலையில் உயிரிழப்பு

கன்னியாகுமரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டு இருந்த கோடிமுனை பகுதியை சேர்ந்த 40 வயது ஜெகன் என்பவர் உயிரிழந்தார்.
கன்னியாகுமரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டிருந்தவர் பரிசோதனை முடிவு வெளிவராத நிலையில் உயிரிழப்பு
x
கன்னியாகுமரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டு இருந்த கோடிமுனை  பகுதியை சேர்ந்த 40 வயது ஜெகன் என்பவர் உயிரிழந்தார்.
கடந்த மூன்றாம் தேதி குவைத் நாட்டில் இருந்து குமரி திருப்பிய இவர் மூளைக் காய்ச்சல் மற்றும் கல்லீரல் பாதிப்பு  காரணமாக கொரோனா வார்டில் நேற்று அனுமதிக்கப்பட்டார்.  இவரது சளி மற்றும் ரத்த மாதிரிகள் நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இவரது பரிசோதனை முடிவுகள் இன்னும் வராத நிலையில் இவர் இன்று காலை உயிரிழந்தார். பரிசோதனை முடிவுகள் வந்த பின்னரே இவர் கொரோனாவால் உயிர் இறந்தாரா? அல்லது வேறு காரணம் உள்ளதா என தெரியவரும் என்று மருத்துவமனை நிர்வாகம் அறிவித்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்