கொரோனா காரணமாக 12ம் வகுப்பு தேர்வில் 34 ஆயிரம் மாணவர்கள் தேர்வு எழுதவில்லை
கொரோனா காய்ச்சல் அச்சம் காரணமாக நேற்று நடந்த 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 34 ஆயிரம் மாணவர்கள் பங்கேற்கவில்லை என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
தமிழகத்தில் கொரோனா நோய் தொற்று அச்சம் காரணமாக கடந்த ஞாயிறு முதல் தமிழகத்தில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பல இடங்களில் பேருந்துகள் சரிவர இயக்கப்படவில்லை . இதனால் நேற்று நடைபெற்ற 12ஆம் வகுப்பு தேர்வில் கொரோனா அச்சம் மற்றும் பேருந்துகள் சரிவர இயக்கப்படாததாலும் 34ஆயிரம் மாணவர்கள் தேர்வு எழுதாத சூழ்நிலை உருவாகியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் குன்றத்தூர் உள்ளிட்ட சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த மாணவர்கள் தேர்வு எழுதவில்லை. அதேபோன்று, திருவள்ளூர் மாவட்டத்தில் 1574 மாணவர்கள் தேர்வில் பங்கேற்கவில்லை என்ற விவரங்களும் வெளியாகியிருக்கின்றன.
Next Story