"ஆசிரியர்கள் வீட்டில் இருந்தே பணி செய்யலாம்"- பள்ளிக் கல்வி இயக்குநர் அறிவிப்பு

தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் 31-ம் தேதி வரை வரை வீட்டில் இருந்தே பணி செய்யலாம் என பள்ளிக் கல்வி இயக்குநர் அறிவித்துள்ளார்.
ஆசிரியர்கள் வீட்டில் இருந்தே பணி செய்யலாம்- பள்ளிக் கல்வி இயக்குநர் அறிவிப்பு
x
கொரோனா பாதிப்பால், விடுமுறையில் உள்ள ஆசிரியர்களுக்கு, பள்ளி கல்வித்துறை இயக்குநர் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில்,வீடுகளில் இருக்கக்கூடிய ஆசிரியர்கள் பல்வேறு பணிகளை செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.தங்கள் பாடம் சார்ந்த கற்பித்தல் குறிப்புகளை தயார் செய்ய வேண்டும்,அடுத்த கல்வி ஆண்டிற்கு தேவையான கற்பித்தல் பணிகளுக்கு தங்களை தயார்படுத்திக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார். நடனம்,  பாரம்பரிய உணவு சமைத்தல், ஓவியம் வரைதல் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் சார்ந்த குறிப்புகளை தயார் செய்ய வேண்டும் என்றும், பள்ளிகளுக்கு வந்த பிறகு அவற்றை அமல்படுத்தி மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டும் என கூறியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்