திருப்பூரில் இளம்பெண் கொடூர கொலை - சுய ஊரடங்கை பயன்படுத்தி கொலையா?
திருப்பூரில் தீயில் கருகிய நிலையில் நிர்வாணமாக இளம்பெண்ணின் பாதி உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
திருப்பூர்மாவட்டம் பல்லடம் அருகே கரைப்புதூர்- இடுவம்பாளையம் சாலையில் தீயிட்டு எரிக்கப்பட்ட நிலையில், பாதி உடல் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், பெண்ணின் வழக்கு பதிவு செய்துள்ளனர். பாதி உடல் துண்டிக்கப்பட்டு மிகவும் கொடூரமான முறையில் தீயில் கொளுத்தப்பட்ட இளம்பெண் யார், கள்ளக்காதல் விவகாரத்தில் கொல்லப்பட்டாரா? அல்லது கற்பழித்து கொல்லப்பட்டாரா என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரித்து வருகின்றனர். சுய ஊரடங்கு என்பதால், மக்கள் நடமாட்டம் இருக்காது என்பதை அறிந்து, சாலையோரம் துணிச்சலாக பெண்ணை கொலையாளிகள் எரித்து சென்றுள்ளது தெரிய வந்துள்ளது.
Next Story