ஹாசினி மரணத்தை போல மீண்டும் ஒரு பயங்கரம் - 10 வயது சிறுமியை பாலியல் வன்முறை செய்து கொன்று 3வது மாடியில் இருந்து வீசிய கொடூரம்

சென்னையில் 10 வயது சிறுமியை பாலியல் வன்முறை செய்து 3வது மாடியில் இருந்து தூக்கி வீசி கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஹாசினி மரணத்தை போல மீண்டும் ஒரு பயங்கரம் - 10 வயது சிறுமியை பாலியல் வன்முறை செய்து கொன்று 3வது மாடியில் இருந்து வீசிய கொடூரம்
x
சென்னை மதுரவாயலில் உள்ள குடியிருப்பில் வசித்து வந்த 10 வயதான சிறுமி அங்குள்ள பள்ளி ஒன்றில் 5 ஆம் வகுப்பு படித்து வந்தார். பார்ப்பதற்கு துறுதுறுவென சுற்றித் திரியும் அந்த சிறுமியிடம் குடியிருப்பில் இருந்த அனைவருமே அன்பாக பழகி வந்துள்ளனர். 

ஆனால் அதே குடியிருப்பில் வசித்து வந்த சுரேஷ் என்ற 29 வயதான இளைஞரின் பார்வையோ வேறு ரகமாக இருந்துள்ளது. சிறுமியிடம் அவ்வப்போது பேச்சுக் கொடுத்து வந்த அவரை அப்போது யாரும் தவறாக எடுத்துக் கொள்ளவில்லை. 

சம்பவத்தன்று பெற்றோர் வீட்டின் உள்ளே தூங்கிக் கொண்டிருந்த வேளையில் சிறுமி கழிவறை செல்வதற்காக வீட்டுக்கு வெளியே வந்துள்ளார். பொதுவான கழிவறை உள்ள குடியிருப்பு என்பதால் சிறுமி வந்ததை பார்த்த சுரேஷ், அவரை வாயைப் பொத்தி அழைத்துச் சென்றுள்ளார். 

சிறுமியை பாலியல் வன்முறை செய்த சுரேஷ், அவர் கூச்சலிட்டதால் ஆத்திரமடைந்துள்ளார். யாருக்கும் தெரிந்துவிட்டால் ஆபத்து என கருதிய அவர், உடனே தலையணையை வைத்து முகத்தை அழுத்தியதோடு அவரை 3வது மாடியில் இருந்து தூக்கி வீசி உள்ளார். 

இதனிடையே சிறுமியை காணாத பெற்றோர் உடனே காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்ததோடு சிறுமியையும் தேடினர். அப்போது வீட்டின் பின்புறம் சிறுமி ரத்தக்காயங்களோடு விழுந்து கிடந்துள்ளார். உடனே பதறிப்போன அவர்கள் சிறுமியை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் சிகிச்சை பலனின்றி சிறுமி உயிரிழந்தார். 

இதையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில் இந்த சம்பவத்தில் சுரேஷ் ஈடுபட்டதும் கொடூரமாக கொன்றதும் உறுதியானது. அவரை போக்சோ சட்டத்தில் கைது செய்த போலீசார், விசாரணை நடத்தி வருகின்றனர். 

ஹாசினி மரணத்தை போல இப்போது மீண்டும் ஒரு சம்பவம் சென்னையில் நடந்திருப்பதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். நிர்பயா சம்பவம், தெலங்கானா என்கவுன்ட்டர் என தண்டனைகள் ஒரு பக்கம் நடந்தாலும் இதுபோன்ற குற்ற சம்பவங்களும் அதிகரித்து வருவது சமூக அவலமே... 


Next Story

மேலும் செய்திகள்