மார்ச் 23 முதல் 31 வரை மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம்
கொரோனா வைரஸ் பாதிப்பை தடுக்கும் வகையில் வரும் 23ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை சென்னை மெட்ரோ ரயில் சேவையில் பெரியளவில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.
கொரோனா வைரஸ் பாதிப்பை தடுக்கும் வகையில் வரும் 23ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை சென்னை மெட்ரோ ரயில் சேவையில் பெரியளவில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. நாளை மக்கள் ஊரடங்குக்கு பிரதமர் அழைப்பு விடுத்த நிலையில், நாளை ஒரு நாள் மெட்ரோ ரயில் சேவை முழுமையாக நிறுத்தப்பட்டு உள்ளது. இதன் தொடர்ச்சியாக வரும் 23ஆம் தேதி தொடங்கி 31-ஆம் தேதி வரை மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது. வரும் 23ஆம் தேதி முதல், காலை 6 மணி முதல் 10 மணி வரை மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் எனவும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை வழக்கம் போல் இயக்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
Next Story