பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து : 8 தொழிலாளர்கள் உடல் கருகி உயிரிழப்பு

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் 8 தொழிலாளர்கள் உடல் கருகி உயிரிழந்தனர்.
பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து : 8 தொழிலாளர்கள்  உடல் கருகி உயிரிழப்பு
x
சாத்தூர் அருகே வெள்ளையாபுரத்தை சேர்ந்த கணேசன் என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை சிப்பிபாறையில் உள்ளது. அங்கு 30க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பட்டாசு தயாரிப்பில் ஈடுபட்டபோது, மருந்துகளில் உராய்வு ஏற்பட்டு பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. இதில் தென்காசி மாவட்டம் மைப்பாறையை சேர்ந்த 5 பெண்கள் உள்ளிட்ட 8 பேர் உடல் கருகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். படுகாயமடைந்த 8 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து குறித்து ஏழாயிரம்பண்ணை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.  இதற்கிடையே, வெடி விபத்து நடந்த பட்டாசு ஆலையை தென்மண்டல ஐஜி சண்முக ராஜேஸ்வரன் பார்வையிட்டார். 

இதுபோல, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை விருதுநகர் மாவட்ட ஆட்சியர் கண்ணன் சந்தித்து ஆறுதல் கூறினார். இதையடுத்து  செய்தியாளர்களிடம் பேசிய ஆட்சியர் கண்ணன், உரிமம் இன்றி இயங்கும் பட்டாசு ஆலைகளுக்கு சீல் வைக்கப்படும் என கூறினார். 


Next Story

மேலும் செய்திகள்