கொரோனா பரிசோதனை செய்யப்பட்டவர்களுக்கு கையில் அழியாத மை கொண்டு சீல் வைப்பு

கொரோனா பரிசோதனை செய்யப்பட்டவர்களுக்கு மதுரை மாவட்ட நிர்வாகம் கையில் சீல் வைக்கும் வீடியோவை மாவட்ட ஆட்சியர் வினய் வெளியிட்டு உள்ளார்.
கொரோனா பரிசோதனை செய்யப்பட்டவர்களுக்கு கையில் அழியாத மை கொண்டு சீல் வைப்பு
x
கடந்த 2 நாட்களாக துபாயில் இருந்து விமானம் மூலமாக 250க்கும் மேற்பட்டவர்கள் மதுரைக்கு அழைத்து வரப்பட்டனர். அவர்களுக்கு விமான நிலையத்தில் முதற்கட்ட சோதனை நடத்தப்பட்டது. கொரோனா சோதனை நடத்தப்படும் அனைவருக்கும் கையில் சீல் வைக்கப்படுகிறது.  சோதனைக்கு பின் ஏதாவது பாதிப்பு இருப்பது தெரிய வந்தால், அவர்களை அடையாளம் காண்பதற்காக, அழியாத மை கொண்டு, இந்த சீல் வைக்கப்படுவதாக அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்