முக கவசம் - கூடுதல் விலைக்கு விற்ற மருந்தகத்திற்கு சீல் - மாவட்ட ஆட்சியர் அதிரடி

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக புதுக்கோட்டையில் முக கவசம் மற்றும் கிருமி நாசினி மருந்து கூடுதல் விலைக்கு விற்கப்படுவதாக புகார் எழுந்தது.
முக கவசம் - கூடுதல் விலைக்கு விற்ற மருந்தகத்திற்கு சீல் - மாவட்ட ஆட்சியர் அதிரடி
x
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக புதுக்கோட்டையில் முக கவசம் மற்றும் கிருமி நாசினி மருந்து கூடுதல் விலைக்கு விற்கப்படுவதாக புகார் எழுந்தது. இதையடுத்து புதுகை மாவட்ட ஆட்சியர் உமா மகேஸ்வரி, கீழராஜ வீதியில் உள்ள ஒரு மருந்தகத்தில் நேரில் சென்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். இதில் முக கவசம் மற்றும் கிருமி நாசினி மருந்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து அந்த மருந்தகத்திற்கு சீல் வைக்க ஆட்சியர் உத்தரவிட்டார்.


Next Story

மேலும் செய்திகள்