கொரோனா குறித்து சமூக வலைத்தளங்களில் அவதூறு - கோவையில் ஹீலர் பாஸ்கர் கைது
கொரோனா குறித்து சமூக வலைத்தளங்களில் அவதூறு பரப்பியதாக ஹீலர் பாஸ்கரை கோவையில் போலீசார் கைது செய்தனர்.
கொரோனா வைரஸ் தொடர்பாக ஹீலர் பாஸ்கர் சமூக வலைத்தளங்களில் பல்வேறு கருத்துகளை பதிவிட்டு வருகிறார். இதுதொடர்பான சர்ச்சைகள் எழுந்த நிலையில் சுகாதாரத்துறை அதிகாரி ரமேஷ் குனியமுத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து பொதுமக்களை பீதி அடையச் செய்வது, அரசு ஊழியர்களை தரக்குறைவாக பேசுவது உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து ஹீலர் பாஸ்கரை போலீசார் கைது செய்தனர்.
Next Story