கொரோனா பாதிப்பு குறித்து வதந்தி - பாஜக பிரமுகர் கைது
நாகை மாவட்டம் குத்தாலத்தில் வெளிநாட்டில் இருந்து திரும்பிய நபருக்கு கொரோனா பாதிப்பு உள்ளதாக வதந்தி பரப்பிய பாஜக பிரமுகரை, போலீசார் கைதுசெய்தனர்.
நாகை மாவட்டம் குத்தாலத்தில் வெளிநாட்டில் இருந்து திரும்பிய நபருக்கு கொரோனா பாதிப்பு உள்ளதாக வதந்தி பரப்பிய பாஜக பிரமுகரை, போலீசார் கைதுசெய்தனர். ஆனந்த் என்பவர், சமீபத்தில் லண்டனில் இருந்து திரும்பி குத்தாலத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளார். இந்நிலையில், அப்பகுதியை சேர்ந்த பாஜக பிரமுகர் புகழேந்தி என்பவர், ஆனந்துக்கு கொரோனா பாதிப்பு உள்ளதாக கூறி வதந்தி பரப்பியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து ஆனந்த் அளித்த புகாரின் பேரில் போலீசார், புகழேந்தியை கைதுசெய்து, சிறையிலடைத்தனர்.
Next Story