சிஏஏ போராட்டம் - 2,500 பேர் மீது வழக்கு : 269வது சட்டப்பிரிவின் கீழ் முதல் வழக்கு

சென்னையில் இந்திய தண்டனை சட்டம் 269ன் கீழ் முதல் முறையாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
சிஏஏ போராட்டம் - 2,500 பேர் மீது வழக்கு : 269வது சட்டப்பிரிவின் கீழ் முதல் வழக்கு
x
சென்னையில் இந்திய தண்டனை சட்டம் 269ன் கீழ் முதல் முறையாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக கடந்த 18ஆம் தேதி தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பு சார்பில் சிறை நிரப்பும் போராட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற 2 ஆயிரத்து 500 பேர் மீது 4 பிரிவுகளின் கீழ் எஸ்பிளனேடு காவல் துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதில் தொற்று நோய் பரப்பக்கூடிய கவனக்குறைவான செயலில் ஈடுபட்டதாக, 269ஆவது சட்டப்பிரிவின் கீழ் முதல் முறையாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்