சென்ட்ரல் ரயில் நிலையத்தில் காணாமல் போன குழந்தை தெலுங்கானா ரயில் நிலையத்தில் மீட்பு

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் காணாமல் போன 5 வயது பெண் குழந்தை , தெலுங்கானா மாநிலம் ராமகுண்டா ரயில் நிலையத்தில் மீட்கப்பட்டது.
சென்ட்ரல் ரயில் நிலையத்தில் காணாமல் போன குழந்தை தெலுங்கானா ரயில் நிலையத்தில் மீட்பு
x
பீகார் மாநிலத்தை சேர்ந்த மனோஜ்குமார் தன் 5 வயது மகள் பம்மி குமாரி மற்றும் குடும்பத்தினரோடு சென்னைக்கு வந்துள்ளார். அதன் பின் சொந்த ஊர் திரும்ப சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு வந்த போது ,கூட்டநெரிசலில் சிறுமி மாயமானார். போலீசார் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில் குழந்தை தெலுங்கானா வழியாக மும்பை செல்லக்கூடிய மும்பை மெயில் எக்ஸ்பிரஸில் ஏரியது தெரியவந்தது. இதனடிப்படையில், தெலுங்கானா மாநிலம் ராமகுண்டா ரயில் நிலையத்தில் அந்த ரயில் நின்ற பொழுது அங்குள்ள ரயில்வே போலீசார், ரயிலில் தனியாக இருந்த சிறுமி பொம்மி குமாரியை மீட்டு, சென்னை ரயில்வே போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.  இதையடுத்து, சிறுமியின் பெற்றோர் ராமகுண்டா ரயில் நிலையத்திற்கு சென்றுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்