விமான நிலையத்தில் கொரோனா பரிசோதனை - பெயரளவில் நடைபெறுவதாக புகார்

கொரோனா எதிரொலியாக, சேலம் விமான நிலையத்தில் இருந்து சென்னை செல்லும் பயணிகளின் எண்ணிக்கை பெருமளவு குறைந்துள்ளது.
விமான நிலையத்தில் கொரோனா பரிசோதனை - பெயரளவில்  நடைபெறுவதாக புகார்
x
கொரோனா எதிரொலியாக, சேலம் விமான நிலையத்தில் இருந்து சென்னை செல்லும்  பயணிகளின் எண்ணிக்கை பெருமளவு குறைந்துள்ளது. வழக்கமாக 70  பயணிகள் வரை சென்ற நிலையில், தற்போது இந்த எண்ணிக்கை 20 ஆக குறைந்துவிட்டது. இதனிடையே, சேலம் விமான நிலையத்தில், ஒரு மருத்துவ குழு மட்டுமே உள்ளதால் கொரோனா பரிசோதனை பெயரளவில் மட்டுமே நடைபெறுவதாகவும், பயணிகளுக்கு கையுறையோ, முகக் கவசமோ வழங்கப்படுவதில்லை என குற்றம்சாட்டு எழுந்துள்ளது. இதனால், விமான நிலையத்தில் நோய் தடுப்பு மற்றும் சுகாதார பணிகளை மேலும் தீவிரபடுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்