வில்லிசை மூலம் கொரோனா விழிப்புணர்வு - மக்கள் இடையே வரவேற்பு
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே முத்துக்குமார் என்பவர் வில்லிசை மூலம் கொரனா வைரஸ் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தி வருவது மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே முத்துக்குமார் என்பவர் வில்லிசை மூலம் கொரனா வைரஸ் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தி வருவது மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. முத்துக்குமார், கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக வில்லிசை குழுவை நடத்தி வருகிறார். இந்நிலையில், தற்போது வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த, இவரது குழுவே பாடலை இயற்றி, இசையமைத்து, வில்லிசை மூலம் அதை மக்களிடம் கொண்டு சேர்த்து வருகின்றனர். சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இந்த பாடல், மக்களிடம் வரவேற்பை பெற்று வருகிறது.
Next Story