லஞ்ச புகாரில் கைதான பெண் அதிகாரி - நீதிபதி முன்பு ஆஜர்படுத்திய போது மாரடைப்பு

கரூரில் லஞ்ச புகாரில் கைதான பெண் அதிகாரி, மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்
லஞ்ச புகாரில் கைதான பெண் அதிகாரி - நீதிபதி முன்பு ஆஜர்படுத்திய போது மாரடைப்பு
x
கரூர் மாவட்டம் பவித்திரத்தை சேர்ந்த ரமேஷ், வீட்டுமனை பிரிப்புக்கு அனுமதி கோரி வட்டார வளர்ச்சி அலுவலர் ஜெயந்திராணியை அணுகி உள்ளார். அனுமதி வழங்க பெண் அதிகாரி  சம்பந்தப்பட்டவரிடம், 30 ஆயிரம் ரூபாய் லஞ்சமாக பெற்றதாக கூறப்படுகிறது. இ​தையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசார், பெண் அதிகாரியை கைது செய்து மாஜிஸ்திரேட் மலர்விழி வீட்டிற்கு அழைத்து சென்று ஆஜர்படுத்தினர். அப்போது, பெண் அதிகாரி ஜெயந்திராணிக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு, சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை உயிரிழந்தார்.

Next Story

மேலும் செய்திகள்