கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா? : சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் தலைமை நீதிபதி திடீர் ஆய்வு
கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில் சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் தமிழகம் முழுவதும் உள்ள கீழமை நீதிமன்றங்களில் அடுத்த 3 வார காலங்களுக்கு அவசர வழக்குகள் மட்டுமே விசாரிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில் சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் தமிழகம் முழுவதும் உள்ள கீழமை நீதிமன்றங்களில் அடுத்த 3 வார காலங்களுக்கு அவசர வழக்குகள் மட்டுமே விசாரிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. இந்நிலையில், தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி, சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது கூட்டம் அதிகமாக இருந்த கீழமை நீதிமன்றங்களில், வழக்குகள் தொடர்பான சாட்சி விசாரணை மேற்கொள்ள வேண்டாம் என்றும் எக்காரணம் கொண்டும் கூட்டம் கூடக்கூடாது எனவும் வலியுறுத்தினார். மேலும் அவ்வப்போது கிருமிநாசினிகளை தெளிக்கவும், தெர்மல் பரிசோதனைக்கு பிறகே நீதிமன்றங்களுக்குள் யாரையும் அனுமதிக்கவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
Next Story