சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு : அழகு நிலைய உரிமையாளரை அடித்து உதைத்த மக்கள்

கோவையில் சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறி அழகு நிலைய உரிமையாளரை ஊர் மக்கள் ஒன்று சேர்ந்து அடித்து உதைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு : அழகு நிலைய உரிமையாளரை அடித்து உதைத்த மக்கள்
x
கோவை மாவட்டம் சூலூரை சேர்ந்த கிறிஸ்டோபர் என்பவர் தன் மனைவியுடன் சேர்ந்து அழகு நிலையம் மற்றும் பேன்சி ஸ்டோர் நடத்தி வருகிறார். பெரும்பாலான நேரங்களில் பார்லரில் இருக்கும் இவர், அந்த பகுதியை சேர்ந்த பள்ளி சிறுமிகளை அழைத்து வந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. மேலும் பெண்களிடம் ஆபாசமான முறையில் உடல் அசைவுகளை வெளிப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது. இதுதொடர்பாக சிறுமி ஒருவர் தன் பெற்றோரிடம் தகவல் கூறிய நிலையில் அவர்கள் பார்லர் முன் திரண்டனர். கிறிஸ்டோபரை பார்த்ததும் மக்கள் அவரை அடித்து உதைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. 


Next Story

மேலும் செய்திகள்