ரவுடிகள் கொண்டாடிய பிறந்தநாள் நிகழ்ச்சி - மதுரையில் 3 சிறுவர்கள் உள்பட 5 பேர் கைது

மதுரையில் பட்டா கத்தியை வைத்து கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய ரவுடிகளை போலீசார் கைது செய்தனர்.
ரவுடிகள் கொண்டாடிய பிறந்தநாள் நிகழ்ச்சி - மதுரையில் 3 சிறுவர்கள் உள்பட 5 பேர் கைது
x
மதுரை விரகனூர் பகுதியில் பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய சிவா என்பவரின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது நண்பர்கள் பட்டா கத்தியுடன் கேக் வெட்டிக் கொண்டாடி உள்ளனர். அந்தக் காட்சியை சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளனர். காண்போரை அச்சம் கொள்ளும் வகையில் இருந்த அந்த வீடியோ, போலீசாரின் கவனத்திற்கு சென்றது. இதைத் தொடர்ந்து மதுரை கல்மேடு பகுதியைச் சேர்ந்த சிவா, காஞ்சி வனம் மற்றும் 3 சிறுவர்கள் என 5 பேரை மதுரை சிலைமான் காவல்துறையினர் கைது செய்தனர். அவர்கள் பயன்படுத்திய ஆயுதங்களும் பறிமுதல் செய்யப்பட்டது. 


Next Story

மேலும் செய்திகள்