கடன் வாங்கி தருவதாக கூறி ரூ.5 லட்சம் மோசடி - போலி வங்கி மேலாளர் சிறையில் அடைப்பு

கன்னியாகுமரி மாவட்டம் கருங்கலில் வங்கியில் கடன் வாங்கித் தருவதாக கூறி பெண்ணிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட போலி வங்கி மேலாளரை போலீசார் கைது செய்துள்ளனர்.
கடன் வாங்கி தருவதாக கூறி ரூ.5 லட்சம் மோசடி - போலி வங்கி மேலாளர் சிறையில் அடைப்பு
x
கன்னியாகுமரி மாவட்டம் கருங்கலில், வங்கியில் கடன் வாங்கித் தருவதாக கூறி, பெண்ணிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட போலி வங்கி மேலாளரை போலீசார் கைது செய்துள்ளனர். குறும்பனை பகுதியை சேர்ந்த பெண் ஒருவரிடம், 5 லட்சம் கொடுத்தால் மூன்றே நாளில் 20 லட்சம் ரூபாய் லோன் வாங்கி தருவதாக எட்வின் லாரன்ஸ் ராஜா என்பவர் கூறியுள்ளார். இதை நம்பி பணம் கொடுத்த அவர், எட்வினுடன் காரில் நாகர்கோவில் சென்றுள்ளார். அப்போது எட்வின் பாலியல் அத்துமீறலில் ஈடுபடவே அந்த பெண் கூச்சலிட்டுள்ளார். இதையடுத்து அக்கம்பக்கத்தினர் அவரை சரமாரியாக தாக்கி போலீசில் ஒப்படைத்தனர். 


Next Story

மேலும் செய்திகள்