ஒரே நாளில் 11 செல்போன் திருட்டு : ஆந்திர இளைஞர்கள் 2 பேர் கைது

சென்னையில் ஒரே நாளில் 11 செல்போனை திருடிய ஆந்திர மாநில இளைஞர்களை போலீசார் கைது செய்தனர்.
ஒரே நாளில் 11 செல்போன் திருட்டு : ஆந்திர இளைஞர்கள் 2 பேர் கைது
x
சென்னையில் ஒரே நாளில் 11 செல்போனை திருடிய ஆந்திர மாநில இளைஞர்களை போலீசார் கைது செய்தனர்.  சென்னை தாம்பரம் பேருந்து நிலையத்தில் காத்திருக்கும் பயணிகளிடம் நூதனமான முறையில் செல்போன் திருடப்பட்டது. இதுதொடர்பான புகார்கள் அதிகம் வந்த நிலையில் போலீசார் விசாரணையை துரிதப்படுத்தினர். 

அப்போது செய்தித்தாளை கையில் வைத்துக் கொண்டு நூதனமான முறையில் செல்போனை 2 பேர் திருடியது தெரியவந்தது. அவர்களை போலீசார் சுற்றி வளைத்து விசாரணை நடத்தியதில் இருவரும் ஆந்திர மாநிலம் விஜயவாடாவை சேர்ந்தவர்கள் என தெரியவந்தது. 

வெங்கடேசன், தமிழ்குமார் என 2 பேர் செல்போனை திருடிக் கொண்டிருக்கும் போதே கையும் களவுமாக பிடிபட்டனர். அவர்களிடம் இருந்து 11 செல்போன்களை போலீசார் பறிமுதல் செய்த நிலையில் மேலும் 2 பேர் தப்பி ஓடிவிட்டனர். 

செல்போன் திருட மேற்கு கோதாவரி உள்ளிட்ட பகுதிகளில் பிரத்யேக பயிற்சிகள் அளிக்கப்பட்டதும், வார இறுதி நாட்களில் சென்னைக்கு வந்து இங்கு கைவரிசை காட்டி விட்டு அந்த செல்போன்களை எல்லாம் ஆந்திராவிற்கு கொண்டு சென்று விற்பதும் தெரியவந்தது. கைதான 2 பேரும் 2016 ஆம் ஆண்டு முதல் செல்போன் திருட்டில் ஈடுபட்டு வருவதாகவும் விசாரணையில் தெரிய வந்தது. 



Next Story

மேலும் செய்திகள்