லாரி ஓட்டுனருக்கு கொரோனா வைரஸ் அறிகுறி? - மருத்துவர்கள் தீவிர பரிசோதனை
ஊத்துக்கோட்டை பகுதியை சேர்ந்த லாரி ஓட்டுனர் ஒருவருக்கு இருமல் மற்றும் காய்ச்சல் இருந்ததால் திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
ஊத்துக்கோட்டை பகுதியை சேர்ந்த லாரி ஓட்டுனர் ஒருவருக்கு இருமல் மற்றும் காய்ச்சல் இருந்ததால் திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு கொரோனா வைரஸ் அறிகுறி இருக்குமோ என மருத்துவர்கள் சந்தேகப்பட்டதால் , மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அவரை சிறப்பு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர். அவரை கொரோனா வைரஸ் பாதிப்பு சிறப்பு வார்டில் அனுமதித்து மருத்துவர்கள் தீவிர பரிசோதனை செய்து வருகின்றனர்.
Next Story