"திட்டமிட்டபடி வேலைநிறுத்தம்" : ரேஷன் கடை பணியாளர் சங்கம் அறிவிப்பு

திட்டமிட்டபடி நாளை தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகள் மூடப்படும் என தமிழ்நாடு ரேஷன் கடை பணியாளர் சங்கம் அறிவித்துள்ளது.
திட்டமிட்டபடி வேலைநிறுத்தம் : ரேஷன் கடை பணியாளர் சங்கம் அறிவிப்பு
x
கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக 7 மண்டலங்களில் நடைபெற இருந்த சிறை நிரப்பும் போராட்டம் மட்டும் ஒத்திவைக்கப்படுவதாக, அந்த சங்கத்தின் சிறப்பு தலைவர் பாலசுப்ரமணியன் தெரிவித்துள்ளார். கடலூரில் செய்தியாளர்களை சந்தித்த அவர், 30 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை தமிழகம் முழுவதும் வேலைநிறுத்தம் நடைபெறும் என தெரிவித்தார். இந்த போராட்டம் காரணமாக தமிழகம் முழுவதும் 33 ஆயிரம் ரேஷன் கடைகள் மூடப்படும் என கூறினார். மேலும் ரேஷன் கடை ஊழியர்களுடன் அரசு பேச்சுவார்த்தை நடத்தி விரைந்து தீர்வு காண வேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். 


Next Story

மேலும் செய்திகள்