திமுகவின் முதல் பொதுக்கூட்ட சுவரொட்டி - "திமுகவில் கருணாநிதிக்கு அன்பழகன் சீனியர்"
திமுகவின் முதல் பொதுக்கூட்டம் சென்னை ராயபுரத்தில் 1949 ஆண்டு நடைபெற்றது.
திமுகவின் முதல் பொதுக்கூட்டம் சென்னை ராயபுரத்தில் 1949 ஆண்டு நடைபெற்றது. அதற்காக அடிக்கப்பட்ட முதல் சுவரொட்டியில் 28 பேர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதில், முதலாவதாக கவிஞர் பாரதிதாசன் பெயரும், இரண்டாவதாக முன்னாள் முதலைச்சர் அண்ணா பெயரும் இருந்தது.
அதேபோல், 28வது பெயராக மறைந்த முதலமைச்சர் கருணாநிதி பெயரும், அதற்கு முன்பாக 27வது பெயராக மறைந்த அன்பழகன் பெயர் இடம்பெற்று இருந்தது. ஆகையால் திமுகவில் கருணாநிதிக்கே பேராசிரியர் அன்பழகன் சீனியர் என்று அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
Next Story

