ரூ.3 கோடி தங்கம், வைர நகைகள் கொள்ளை - தனிப்படை போலீசார் அதிரடி நடவடிக்கை

சேலம் அருகே 3 கோடி ரூபாய் மதிப்பிலான தங்க, வைர நகைகள் கொள்ளை போன நிலையில் அதனை வடமாநிலத்தில் விற்க முயன்ற கும்பலிடம் இருந்து நகைகள் மீட்கப்பட்டது.
ரூ.3 கோடி தங்கம், வைர நகைகள் கொள்ளை - தனிப்படை போலீசார் அதிரடி நடவடிக்கை
x
சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே கடந்த பிப்ரவரி மாதம் 9ஆம் தேதி தெலங்கானாவை சேர்ந்த கவுதம் என்பவர் 3 கோடி மதிப்பிலான தங்க, வைர நகைகளை சொகுசு பேருந்தில் கொண்டு சென்ற போது கொள்ளையடிக்கப்பட்டது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் தனிப்படை அமைத்து தேடி வந்தனர். கொள்ளை கும்பல் மகாராஷ்டிரா மாநிலத்தில் இருப்பது தெரியவந்ததை தொடர்ந்து தனிப்படை  போலீசார் அங்கு விரைந்தனர். அப்போது தர்மபுரி காலிபாவடியில் நகைகளை விற்பனை செய்ய வந்த 5 பேர் கொண்ட கும்பலை போலீசார் சுற்றி வளைத்தனர். அப்போது அவர்களிடம் இருந்து தப்பிய அந்த கும்பல் நகைகளை விட்டுச் சென்றதாக கூறப்படுகிறது. இதையடுத்து 3 கோடி ரூபாய் மதிப்பிலான நகைகளை மீட்ட போலீசார் தப்பி ஓடிய கும்பலை தேடி வருகின்றனர். 


Next Story

மேலும் செய்திகள்