பிட்காயின் தடையை நீக்கியது உச்சநீதிமன்றம் - ரிசர்வ் வங்கி விதித்த தடையை நீக்கி உத்தரவு
பிட்காயினுக்கு ரிசர்வ் வங்கி விதித்திருந்த தடையை நீக்கி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கிரிப்டோ கரன்சி என்று அழைக்கப்படும் பிட்காயின் பயன்பாட்டுக்கு ரிசர்வ் வங்கி தடை விதித்திருந்தது. இதனால், பிட் காயின் மூலம் செய்யப்படும் வர்த்தகம் இந்தியாவில் சட்டவிரோதமாக இருந்து வந்தது. இந்த நிலையில், இது தொடர்பான வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், பிட் காயின் பயன்பாட்டுக்கு ரிசர்வ் வங்கி விதித்திருந்த தடையை நீக்கி உத்தரவிட்டுள்ளது. வங்கிகளும் கிரிப்டோ கரன்சி மூலம் வர்த்தகம் மேற்கொள்ள உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
Next Story

