மறைந்த திமுக எம்எல்ஏ காத்தவராயன் உடலுக்கு அஞ்சலி - இன்று சொந்த ஊரில் இறுதிச் சடங்குகள்

குடியாத்தம் தொகுதி திமுக எம்எல்ஏ காத்தவராயனின் இறுதி சடங்கு இன்று நடைபெறுகிறது.
மறைந்த திமுக எம்எல்ஏ காத்தவராயன் உடலுக்கு அஞ்சலி - இன்று சொந்த ஊரில் இறுதிச் சடங்குகள்
x
குடியாத்தம் தொகுதி திமுக எம்எல்ஏ காத்தவராயனின் இறுதி சடங்கு இன்று நடைபெறுகிறது. கடந்த ஆண்டு மே மாதம் நாடாளுமன்ற தேர்தலின்போது நடைபெற்ற இடைத் தேர்தலில் எம்எல்ஏவாக வெற்றி பெற்ற காத்தவராயன், கடந்த சில மாதங்களாக இதய நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். காத்தவராயன் மறைவுக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித், திமுக தலைவர் ஸ்டாலின் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், அவரது சொந்த ஊரில்,பொதுமக்களின் அஞ்சலிக்காக அவரது உடல் வைக்கப்பட்டுள்ள நிலையில், இன்று இறுதி சடங்குகள் நடைபெற உள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்