ஆம்புலன்சில் வந்து ஆர்.டி.ஓ-விடம் மனு வழங்கிய இளைஞர் - விபத்தை ஏற்படுத்தியவர் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை

மயிலாடுதுறையில் விபத்தில் பாதிக்கப்பட்ட இளைஞர், ஆம்புலன்சில் வந்து கோட்டாட்சியரிடம் மனு வழங்கினார்.
ஆம்புலன்சில் வந்து ஆர்.டி.ஓ-விடம் மனு வழங்கிய இளைஞர் - விபத்தை ஏற்படுத்தியவர் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை
x
மயிலாடுதுறையில் விபத்தில் பாதிக்கப்பட்ட இளைஞர், ஆம்புலன்சில் வந்து கோட்டாட்சியரிடம் மனு வழங்கினார். நாகை மாவட்டம் தில்லையாடி கிராமத்தை சேர்ந்த தமிழ்செல்வன், கடந்த நவம்பர் மாதம் டிராக்டர் மோதிய விபத்தில் படுகாயமடைந்தார். மேலும் விபத்தினால், அவர் எழுந்து நடமாட முடியாத சூழலுக்கு தள்ளப்பட்டார். விபத்து நடந்து, 4 மாதங்கள் கடந்தும், சம்பந்தபட்டவர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுக்காத நிலையில், இன்று தமிழ்செல்வன், தனது உறவினர்களுடன் ஆம்புலன்சில் வந்து, மயிலாடுதுறை கோட்டாட்சியரிடம் மனு வழங்கினார்.

Next Story

மேலும் செய்திகள்