தேசிய அளவிலான மூத்தோர் தடகள போட்டி : தமிழக போலீஸ் அதிகாரி 3 தங்கம் வென்று அசத்தல்

தேசிய அளவிளான மூத்தோர் தடகள போட்டியில் பொள்ளாச்சியை சேர்ந்த போலீஸ் அதிகாரி 3 தங்க பதக்கத்தை கைப்பற்றியுள்ளார்.
தேசிய அளவிலான  மூத்தோர் தடகள போட்டி : தமிழக போலீஸ் அதிகாரி 3 தங்கம் வென்று அசத்தல்
x
தேசிய அளவிளான  மூத்தோர் தடகள போட்டியில் பொள்ளாச்சியை சேர்ந்த போலீஸ் அதிகாரி  3 தங்க பதக்கத்தை கைப்பற்றியுள்ளார். மணிப்பூர் மாநிலம் இம்பாலில் 41-வது தேசீய அளவிளான மூத்தோர் தடகள போட்டி நடைபெற்றது. இதில் 40-வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான ஓட்டப்பந்தயத்தில் பொள்ளாச்சி பகுதியை சேர்ந்த போலீஸ் அதிகாரி கோவிந்தராஜ் 100மீட்டர், 200மீட்டர், ஆயிரத்து 600 மீட்டர் ஆகிய  3 போட்டிகளில் தங்கப் பதக்கத்தை வென்றுள்ளார். தங்கப் பதக்கம் வென்ற போலீஸ் அதிகாரி கோவிந்தராஜை மேற்கு மண்டல ஐஜி பெரியய்யா, கோவைமாவட்ட போலீஸ் கண்காணிப்பாளர் சுர்ஜித்குமார் ஆகியோர் பாராட்டினர்.


Next Story

மேலும் செய்திகள்