சொகுசு பேருந்து, கண்டெய்னர் லாரி மோதல் : 20 பேர் உயிரிழந்த பரிதாபம்- 4 பேர் கவலைக்கிடம்

திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே சொகுசு பேருந்தும் கன்டெய்னர் லாரியும் மோதிக்கோண்ட கோர விபத்தில் 20 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
சொகுசு பேருந்து, கண்டெய்னர் லாரி மோதல் : 20 பேர் உயிரிழந்த பரிதாபம்- 4 பேர் கவலைக்கிடம்
x
திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே சொகுசு பேருந்தும் கன்டெய்னர் லாரியும் மோதிக்கோண்ட கோர விபத்தில் 20 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். பெங்களூருவில் இருந்து ஆலப்புழா நோக்கி  கேரள அரசு சொகுசு பேருந்து சென்று கொண்டிருந்தது. அவிநாசி அருகே சென்ற போது,  கேரளாவில் இருந்து சேலம் நோக்கி வந்து கொண்டிருந்த கன்டெய்னர் லாரி​யுடன் நேருக்கு நேர் மோதியது. இந்த விபத்தில் 20 பேர் உயிரிழந்தனர். மேலும் 4 பேர் கவலைக்கிடமாக உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்