ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி : 6 பேரிடம் மோசடி செய்த சென்னை நபர் கைது

விழுப்புரம் அருகே உள்ள விராட்டிக்குப்பத்தை சேர்ந்த செல்வம் , அங்காளம்மன் சாமிக்கு பூஜை செய்து அருள்வாக்கு கூறி வருகிறார்.
ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி  மோசடி : 6 பேரிடம் மோசடி செய்த சென்னை  நபர் கைது
x
விழுப்புரம் அருகே உள்ள விராட்டிக்குப்பத்தை சேர்ந்த செல்வம் , அங்காளம்மன் சாமிக்கு பூஜை செய்து அருள்வாக்கு கூறி வருகிறார். அவரிடம் பழகிய சென்னை கொட்டிவாக்கம் விவேகானந்தர் தெருவை சேர்ந்த குலாப்சிங் , ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கி தருவதாக கூறியுள்ளார் . இதனை நம்பி தமது உறவினர்கள் 6 பேர்களிடம்  14 லட்சம் ரூபாயை வாங்கி குலாப் சிங்கிடம் கொடுத்துள்ளார் .. ஆனால் அவர் போலி பணி நியமன ஆணைகளை கொடுத்து ஏமாற்றி உள்ளார் .. ஏமாந்தவர்கள் அளித்த புகாரின் பேரில்  குலாப்சிங்கை போலீசார் கைது செய்துள்ளனர். அவரது கூட்டாளியான , தலைமறைவாக உள்ள அருள்பிரகாசத்தை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்