தென்னை நார் தயாரிக்கும் மில்லில் தீ விபத்து : ஏராளமான தென்னை நார்கள் எரிந்து கருகின
ஓமலூர் அருகே தனியார் மில்லில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள நார்கள், இயந்திரங்கள் சேதமடைந்தன.
சேலம் மாவட்டம் ஓமலூரை அடுத்த ஜோடுகுளி பகுதியை சேர்ந்த தன்ராஜ் என்பவர் தனது தோட்டத்தில் தென்னை நார் தயாரிக்கும் மில் வைத்துள்ளார். அங்கு திடீர் தீ விபத்து ஏற்பட்டது. தீ வேகமாக பரவி அங்கிருந்த ஏராளமான தென்னை நார்கள் எரிந்து கருகின. இயந்திரங்களும் தீயில் சேதமடைந்தன. தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து 5 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். தீ விபத்துக்கு மின்கசிவே காரணம் என முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
Next Story