"திட்டமிட்டபடி முற்றுகை போராட்டம்" - இஸ்லாமிய அமைப்புகள் அறிவிப்பு

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக சட்டப்பேரவை நோக்கி முற்றுகை போராட்டம் திட்டமிட்டபடி நடைபெறும் என இஸ்லாமிய அமைப்புகள் அறிவித்துள்ளன.
x
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக சட்டப்பேரவை நோக்கி முற்றுகை  போராட்டம் திட்டமிட்டபடி நடைபெறும் என இஸ்லாமிய அமைப்புகள் அறிவித்துள்ளன. உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்த நிலையில், சென்னை அண்ணா சாலை பள்ளிவாசலில் இஸ்லாமிய அமைப்புகளின் தலைவர்கள் அவசர ஆலோசனை நடத்தினர். 
இதில் மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா, மனிதநேய ஜனநாயக கட்சி தலைவர் தமிமுன் அன்சாரி மற்றும் சிறுபான்மை கட்சி தலைவர்கள் பங்கேற்றனர். இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் காஜா மொய்தீன் பாகவி, வழக்கில் தாங்கள் எதிர்மனுதாரராக சேர்க்கப்படவில்லை என்றும், எனவே நீதிமன்றம் விதித்துள்ள  தடை தங்களுக்கு பொருந்தாது எனவும் தெரிவித்தார். 

Next Story

மேலும் செய்திகள்