குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு : 6-வது நாளாக தொடரும் போராட்டம்

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை வண்ணாரப்டேடையில் 6-வது நாளாக போராட்டம் தொடர்கிறது.
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு : 6-வது நாளாக தொடரும் போராட்டம்
x
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை வண்ணாரப்டேடையில் 6-வது நாளாக போராட்டம் தொடர்கிறது. முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மற்றும் ராணுவ வீரர்கள் போல் வேடமணிந்த குழந்தைகள் தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர். இதனிடையே போராட்ட களத்திற்கு நேரில் சென்ற தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் வெள்ளையன் தமது ஆதரவை தெரிவித்தார்.

 கடையநல்லூர் - இஸ்லாமிய மக்கள் தொடர் தர்ணா போராட்டம்



குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கடையநல்லூரில் அனைத்து இஸ்லாமிய அமைப்பினர் தொடர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இரவிலும்  ஏராளமான இஸ்லாமிய மக்கள் போராட்டத்தில் கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பினர். 


திருச்சி - இரவிலும்  இஸ்லாமிய மக்கள் தொடர் போராட்டம்



குடியுரிமை திருத்த சட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி திருச்சியில் இரண்டாவது நாளாக  இரவிலும்  இஸ்லாமிய மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதேபோல் குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து பெரியகுளத்தில் உள்ள  பள்ளி வாசல்  முன்பாக இஸ்லாமிய மக்கள் ஏழாவது நாளாக  போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

Next Story

மேலும் செய்திகள்