மதுரை : 4வது நாளாக தொடரும் போராட்டம் - பேச்சுவார்த்தை தோல்வி

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தியும், சென்னை வண்ணாரப்பேட்டையில் நடைபெற்ற தாக்குதல் சம்பவத்தை கண்டித்தும், தொடர்ந்து 4 வது நாளாக மதுரை மாகூப்பாளையத்தில் போராட்டம் நடைபெற்றது.
மதுரை : 4வது நாளாக தொடரும் போராட்டம் - பேச்சுவார்த்தை தோல்வி
x
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தியும், சென்னை வண்ணாரப்பேட்டையில் நடைபெற்ற தாக்குதல் சம்பவத்தை கண்டித்தும், தொடர்ந்து 4 வது நாளாக மதுரை மாகூப்பாளையத்தில் போராட்டம் நடைபெற்றது. இந்த தொடர் போராட்டத்தை கைவிட கோரி மதுரை உட்கோட்ட நடுவர் முருகானந்தம் தலைமையில் நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஜமாத் தலைவர் நிஜாம் அலிகான் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றும் வரை போராட்டம் தொடரும் என தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்