சுருக்கு கம்பியில் சிக்கிய புலி தப்பியோட்டம் : புலியை தேடும் பணி தீவிரம்

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உயிலட்டி கிராமத்தில் உள்ள தேயிலை தோட்டத்தில் உள்ள சுருக்கு கம்பியில் புலி ஒன்று சிக்கியது.
சுருக்கு கம்பியில் சிக்கிய புலி தப்பியோட்டம் : புலியை தேடும் பணி தீவிரம்
x
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உயிலட்டி கிராமத்தில் உள்ள தேயிலை தோட்டத்தில் உள்ள சுருக்கு கம்பியில் புலி ஒன்று சிக்கியது. தகவலறிந்து வந்த வனத்துறையினர், புலிக்கு மயக்க மருந்து செலுத்த முயற்சித்தனர். ஆனால் அதற்குள் சுருக்கு கம்பியை பிய்த்து கொண்டு தப்பி சென்ற புலி, காலில் காயங்களுடன் அப்பகுதியில் உலா வருவதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். புலியின் நடமாட்டத்தை கண்காணிக்க அப்பகுதியில் மூன்று கண்காணிப்பு கேமரா வைக்கப்பட்டுள்ள நிலையில், டிரோன் கேமரா மூலம் புலியை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுளது. 

Next Story

மேலும் செய்திகள்