ஈரோடு : சர்க்கரை ஆலையை கண்டித்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் கைது

சர்க்கரை ஆலையை கண்டித்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளை போலீசார் கைது செய்தனர்.
ஈரோடு : சர்க்கரை ஆலையை கண்டித்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் கைது
x
சர்க்கரை ஆலையை கண்டித்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளை போலீசார் கைது செய்தனர். ஈரோடு மாவட்டம் ஆப்பக்கூடல் பகுதியில் உள்ள தனியார் சர்க்கரை ஆலையை கண்டித்து கையில் கரும்பு சோகையை ஏந்தியபடி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். 60 கோடி ரூபாய் நிலுவை தொகையை வழங்காமல் காலதாமதம் செய்து வருவதாக விவசாயிகள் குற்றம் சாட்டினர். ​​மேலும், சர்க்கரை விலையை வழங்கவில்லை என்றும் கூறி ஆலை நிர்வாகத்திற்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். தடையை மீறி முற்றுகை போராட்டத்தில் ஈடுபடுவதாக கூறி விவசாயிகளை, போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால் விவசாயிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.


Next Story

மேலும் செய்திகள்