வடுகபட்டியில் களைகட்டிய ஜல்லிக்கட்டு போட்டி - 749 காளைகள், 300 மாடுபிடி வீரர்கள் பங்கேற்பு

புதுக்கோட்டை மாவட்டம் வடுகபட்டி சுருளி ஆண்டவர் கோவில் திருவிழாவையொட்டி, ஜல்லிக்கட்டு போட்டி உற்சாகமாக தொடங்கி நடைபெற்று வருகிறது.
வடுகபட்டியில் களைகட்டிய ஜல்லிக்கட்டு போட்டி - 749 காளைகள், 300 மாடுபிடி வீரர்கள் பங்கேற்பு
x
புதுக்கோட்டை மாவட்டம் வடுகபட்டி சுருளி ஆண்டவர் கோவில் திருவிழாவையொட்டி, ஜல்லிக்கட்டு போட்டி உற்சாகமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து கொண்டுவரப்பட்ட 749 காளைகளும், 300 மாடுபிடி வீரர்களும் பங்கேற்றுள்ளனர். போட்டியின்போது, வாடிவாசலில் இருந்து சீறிப்பாய்ந்து சென்ற காளைகளை, இளைஞர்கள் ஆர்வமுடன் அடக்க முயன்றனர். ஜல்லிக்கட்டு போட்டியை, சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் கண்டுகளித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்