உயர்நிலைப் பள்ளிகளை தரம் உயர்த்தும் விவகாரம் : "முதலமைச்சர் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும்" - அமைச்சர் செங்கோட்டையன் உறுதி

தமிழகத்தில் உயர்நிலைப் பள்ளிகளை தரம் உயர்த்தும் விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் உறுதி அளித்துள்ளார்
உயர்நிலைப் பள்ளிகளை தரம் உயர்த்தும் விவகாரம் : முதலமைச்சர் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும் - அமைச்சர் செங்கோட்டையன் உறுதி
x
சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது பேசிய திமுக உறுப்பினர் தங்கம் தென்னரசு உயர்நிலை பள்ளியாக தரம் உயர்த்துவதற்கு 1 லட்சமும், மேல்நிலைபள்ளியாக உயர்த்துவதற்கு 2 லட்சமும் பொதுமக்கள் திரட்டி கொடுக்கும் நிலை உள்ளதாக கூறினார். பொதுமக்கள் பங்கீட்டு தொகையை அரசே வழங்க வேண்டும் எனவும்  வலியுறுத்தினார். இதற்கு பதில் அளித்த அமைச்சர் செங்கோட்டையன், மலைவாழ் கிராமப்புற பள்ளிகளுக்கு  பொதுமக்கள் பங்கீட்டு தொகையில் விதி விலக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் உறுப்பினரின் கோரிக்கை தொடர்பாக முதலமைச்சர் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும் எனவும் உறுதியளித்தார். 



Next Story

மேலும் செய்திகள்