தமிழக சட்டப் பேரவையில் பட்ஜெட் மீதான விவாதம் இன்று தொடக்கம் - பல்வேறு பிரச்சினைகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டம்

தமிழக சட்டப் பேரவையில் பட்ஜெட் மீதான விவாதம் இன்று தொடங்கும் நிலையில் பல்வேறு பிரச்சினைகளை எழுப்ப தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.
தமிழக சட்டப் பேரவையில் பட்ஜெட் மீதான விவாதம் இன்று தொடக்கம் - பல்வேறு பிரச்சினைகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டம்
x
2020-2021-ஆம் ஆண்டுக்கான பட்ஜெட், தமிழக சட்டப் பேரவையில் கடந்த 14-ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. துணை முதலமைச்சரும், நிதி அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் பட்ஜெட் அறிக்கையை வாசித்தார். இந்த நிலையில், பட்ஜெட் மீதான விவாதம் இன்று தொடங்குகிறது. காலை 10 மணிக்கு தொடங்கும் சட்டப் பேரவை கூட்டத்தில் முதலில் கேள்வி நேரம் எடுத்துக்கொள்ளப்படும். கேள்வி நேரம் முடிந்ததும், ஜீரோ ஹவர் எனப்படும் நேரமில்லா நேரத்தில் பல்வேறு பிரச்சினைகளை எழுப்ப தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன. குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக சட்டப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்ற கோரிக்கையை எதிர்க்கட்சிகள் வலியுறுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது

நேரமில்லா நேரத்தை தொடர்ந்து, பட்ஜெட் மீதான விவாதம் தொடங்குகிறது. இந்த விவாதத்தில் பங்கேற்று ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பேச இருக்கின்றனர். உறுப்பினர்களின் கேள்விகளுக்கு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பதிலளிக்க உள்ளார். தொடர்ந்து, நாளையும், நாளை மறுதினமும் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற இருக்கிறது. 20-ஆம் தேதி பட்ஜெட் மீதான விவாதத்திற்கு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பதில் அளித்து பேசுகிறார்.


Next Story

மேலும் செய்திகள்