மண்டல அளவிலான ஆணழகன் போட்டி : 4 மாவட்டங்களில் இருந்து 208 வீரர்கள் பங்கேற்பு
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் ஆணழகன் போட்டி நடைபெற்றது.
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் ஆணழகன் போட்டி நடைபெற்றது. 50 கிலோ முதல் 85 கிலோ வரை எட்டு பிரிவுகளாக நடைபெற்ற இப்போட்டிகளில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர் ஆகிய நான்கு மாவட்டங்களில் இருந்து 208 வீரர்கள் கலந்து கொண்டனர். இதில், பயிற்சியாளர்களுக்கும், மாற்றுத்திறனாளிகளுக்கும் தனித் தனியே போட்டிகள் நடத்தப்பட்டன. வீரர்கள் தங்களது உடற்கட்டு அழகுகளை காண்பித்து காண்போரை வெகுவாக கவர்ந்தனர். முதல் மூன்று இடங்களை பிடித்த ஆணழகன்களுக்கு பரிசுகளும் சான்றிதழும் வழங்கப்பட்டது.
Next Story