திருவண்ணாமலை : காணாமல் போனவர் முட்புதரில் சடலமாக மீட்பு

காணாமல் போன அரசூர் கிராமத்தைச் சேர்ந்த கோபாலகிருஷ்ணன் என்பவரை முட்புதரில் சடலமாக போலீசார் மீட்டனர்.
திருவண்ணாமலை : காணாமல் போனவர் முட்புதரில் சடலமாக மீட்பு
x
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே இரண்டு நாட்களுக்கு முன்பு காணாமல் போன அரசூர் கிராமத்தைச் சேர்ந்த கோபாலகிருஷ்ணன் என்பவரை முட்புதரில் சடலமாக போலீசார் மீட்டனர். பிரேத பரிசோதனைக்கு பின்னர் கோபாலகிருஷ்ணனின் உடலை வாங்க மறுத்த உறவினர்கள், மர்ம மரணத்துக்கு காரணமான குற்றவாளிகளை கைது செய்யக் கோரி சாலை மறியிலில் ஈடுபட்டனர். அவர்களிடம் போலீசார் நடத்திய பேச்சு  வார்த்தையில் சமரசம் ஏற்பட்டதை தொடர்ந்து மறியல் கைவிடப்பட்டது. 

Next Story

மேலும் செய்திகள்