"தமிழகம் முழுவதும் ரயில் பாதைகள் மின்மயமாக்கப்படும்" : 3 ஆண்டுகளில் முடிக்கப்படும் என தகவல்

அடுத்த 3 ஆண்டுகளுக்குள் தமிழகம் முழுவதும் உள்ள ரயில்பாதைகள் மின்மயமாக்கப்படும் என ரயில்வே துறை மின்மயமாக்கல் பொது மேலாளர் ஒய்.பி.சிங் தெரிவித்துள்ளார்.
தமிழகம் முழுவதும் ரயில் பாதைகள் மின்மயமாக்கப்படும் : 3 ஆண்டுகளில் முடிக்கப்படும் என தகவல்
x
அடுத்த 3 ஆண்டுகளுக்குள் தமிழகம் முழுவதும் உள்ள ரயில்பாதைகள் மின்மயமாக்கப்படும் என ரயில்வே துறை மின்மயமாக்கல் பொது மேலாளர் ஒய்.பி.சிங் தெரிவித்துள்ளார். மானாமதுரை - மதுரை இடையேயான மின்மயமாக்கும் திட்டத்திற்கான பூமி பூஜையில் பங்கேற்ற அவர்  பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். தமிழகம் முழுவதும் சுமார்  600 கோடி ரூபாய் செலவில் ரயில்பாதை மின்மயமாக்கும் பணிகள் தொடங்கியுள்ளதாக தெரிவித்தார். முதல்கட்டமாக மானாமதுரை - மதுரை இடையே பணிகள் தொடங்கியுள்ளதாகவும் அவர் கூறினார்.

Next Story

மேலும் செய்திகள்